Skip to main content

Posts

சைவமாகிய நான்!

  வாரயிறுதிகளில் மட்டும் அசைவம் வாங்கும் வழக்கம் உள்ள வீடு எங்களுடையது.  வீட்டின் நால்வரும் அசைவம் சாப்பிடுவோம்.  முதன்முதலாக உடம்பு சரியில்லை, விரதம் என அடுத்தடுத்து காரணங்கள் வைத்து அசைவம் தவிர்த்த அம்மா இப்பொழுது உடல்நிலை காரணம் காட்டி முழுதும் நிப்பாட்டி கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.  புரட்டாசி மாதம் உள்ளிட்ட சில காரணம் வைத்து சமைப்பதும் இல்லை.  ஒரு சில சடைப்புகள் செய்து இப்பொழுது சமைக்க ஆரம்பித்து இருந்தார். சகோதரியும் இப்பொழுது சைவத்துக்கு மாறிவிட்டார்.  கொஞ்சம் கொஞ்சமாக அசைவம் குறைத்த இருவரும் கிட்டதட்ட ஒரே காலத்தில் சைவத்துக்கு மாறிவிட்டனர்.  முட்டை வைத்திருக்கும் இடத்தை பார்த்தாயா? கோழி கத்துவது பரிதாபமாக இல்லையா? கடையில் வரும் கெட்ட வாடை, சமைக்கும் பொழுது வரும் வாடை, அதனை உண்ட பின் உன் உடலும் நாறும் தெரியுமா? என ஆரம்பித்து அதுகள் என்னென்ன கருமத்தையெல்லாம் திங்கும் தெரியுமா? என அநாவசிய கான்வோக்கள் பின்னர் தந்தையாரை நிதானம் சொல்ல முடியாது என்கிற நிலையில் வீட்டில் நான் மட்டும் நான்வெஜ் என்றானது. ...

பயபக்தியில் சில நேரம்!!!

வழக்கமான வாக்கிங்தான்.     இந்த வாரயிறுதில மாரியம்மன் கோவில் பொங்கலுக்காக தண்ணியெடுத்து ஊத்துற மக்களும் விடியக்காலை நேரத்த ப்ரிஃபர் பண்றாங்க போல.   நிறைய இடங்கள்ல தோண்டி போட்டு வச்சிருக்காங்கங்குறதால என்னோட     ஷு டேமேஜ் ஆயிடுமோன்னு தயக்கத்துல நடந்து போகும் போதே முன்னால சைக்கிள்ல போற ஆள் நடு ரோட்ல எச்சி துப்பிட்டு போறாரு.     அப்பத்தான் கவனிக்கிறேன் கோவிலுக்கு தண்ணீ ஊத்த போற யாரும் செருப்பு போடல, பத்தாக்குறைக்கு ஈரம் சொட்ட சொட்ட நடந்து போறாங்க.     நம்ம நிலைமை பரவால்ல போல. ஆனா இவங்க சாமிய காரணம் வச்சு இந்த அசிங்கத்துலயும், மோசமான ரோட்லயும் செருப்பு போடாம வெறும் கால்ல நடந்து போறாங்களேன்னு கொஞ்சம் பொது நலமா சிந்தனை செல்லும் போது பின்னாடி வந்துட்டு இருந்த கொஞ்ச பேரு… “அவ ஆளு கூட சண்டை போட்டு இப்பல்லாம் எங்கயும் வெளிய போகாம சேர்ந்து போக ஆளும் இல்லாம வீட்லயே தான் கிடக்காலேன்னு பரிதாபப்பட்டு நாளைக்கு எங்க கூட கோவிலுக்கு தண்ணி ஊத்த வாடின்னு கூப்பிட்டா?!”னு காதுல விழ அப்படியே நடை வேகத்தை அவர்களின் வேகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி மீத கதையையும் கேட்டு க...

ஏப்ரல் ஃபூல்…

  காலை எழுந்தபின் சந்திக்கும் சமயத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலான அம்மாவின் பார்வை சற்றே குழப்பத்தை கொடுத்தது என்ற போதிலும் தூக்கம் முற்றிலும் கலைந்த பின்னர்     என்பதாலோ என்னவோ உடனே நேற்றைய கடைசி பேச்சு நியாபகம் வந்தது.     வீட்டில் நடக்கும் எதனையும் பேசாமல் இருப்பதை பற்றியும் சற்றேறகுறைய நிரந்தரமாக தொடரும் விஷயத்தை பற்றியும் கேட்டதில் வாக்கிங் போக சொன்ன நீயே இப்பொழுது போக விடாமல் இருக்கிறாய் என விதண்டாவாதமாக ஆரம்பித்து ஐந்து நிமிடம் என சொல்லி இவ்வளவு நேரம் (12 நிமிடம் கூடுதலாக) என சொன்னவுடன் பேச்சு அப்படியே அறுந்து போனது.     இதிலொரு செய்தி என்னவென்றால் வழக்கமாக இப்படி நடக்கும் சமயத்தில் நூலறுந்த காத்தாடி போலான அலைபாயும் மனநிலையே வாரக்கணக்கில் நீடிக்கும் என்ற நிலை போய் அடுத்தநாள் காலையே அதனை கடந்து விட்டேன் என்பதில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி.     இது தொடருமாவென தெரியாதே என்கிற எண்ண ஓட்டத்தில் காலண்டர் பார்க்க ஏப்ரல் ஃபூல் என உள்ளிருந்து ஒரு குரல் கத்த எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.     இந்த நாள் இனிய நாள்.

விடை தரும் கனவு

      கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை.  தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள். செஞ்சி கோட்டை      கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்.     சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன்.  காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன்.  2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள். அக்கால கொடூர கனவுகளிலிர...

முக்கியத்துவமென போதிக்கப்பட்டவர்கள்

முதல் நான்கு முக்கியத்துவத்தில் இரண்டாமவர் கிரிக்கெட் ஆர்வம் மிக அதிகம் வாரயிறுதி மேட்ச் பொழுதுகளில் அவர் தடையற பார்க்க நாங்கள் வீட்டினை விட்டு வெளியேற வேண்டும் நாங்கள் வெளியெ செல்ல வற்புறுத்தும் அளவுக்கு அவரை கொண்டுசெல்லக்கூடாதென்பது புரிந்தநாள் ஒரு ஞாயிறு மாலை வீட்டிலிருந்தால் அமைதியாக இருக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழு மற்றும் மூன்று வயதுகளுக்கு புரியாமல் போனதில் வியப்பில்லை அதன் பின்னர் முப்பதை நெருங்கிய ஒன்றும் முப்பதை தாண்டிய இன்னொன்றும் அமைதியாக இருக்கவில்லை இப்பொழுது பிந்தையதை தாண்டிய முந்தைய மூன்றும் ஏழும் அமைதியாக இருக்கின்றன! கார்த்திகை மாதம் ஓர் அழகிய மாதம் கடவுளின் ஏற்பின் காரணமாகவென்பது இப்பொழுதும் எனக்கு ஏற்பில்லை இருந்தபோதும் அந்த நாட்கள் ஓர் அழகியல் விருப்பமாக இருந்ததா என்ற கேள்விக்கு விடையில்லை சிலவற்றை ஏற்கத்தான் வேண்டும் முயற்சிக்க முயற்சித்தேன் காலமும் கட்டாயமும் ஒன்றானது கிரிக்கெட் கிடைத்தது அழகியலுக்கு விடையும் கிடைத்தது நேரம் பரிபோய்விட்டது முதல் நான்கு முக்கியத்துவத்தில் முதன்மையானவர் மூன்றாம் முக்கியத்துவத்தில் நம்பிக்கை மிக அதிகம் வார நாட்கள் எண்ணிக்கையும் கோவ...

நடை பயில்வோமா...

    தன்னுடைய தின தேவைகளுக்கான தேடலில் நாடோடிகளாக வாழ்ந்த காலம் போய் ஒவ்வொரு தேவைகளாய் தீர்த்து, இன்றைய காலகட்டத்தில் நாகரீக மனிதன் அறிவு தேடல் தவிர்த்த ஏனைய பலவற்றில் தன்னுடைய தேவைகளை கிட்டதட்ட பூர்த்தி செய்து கொண்டான்.  அவனுடைய அறிவு தேடலில் அதிகம் வேலை செய்வதில் மூளை முதலிடத்தை எடுத்து கொள்கிறது.  கால்களும், கைகளும்  தன்னுடைய செயல்பாடுகளை குறைத்து கொண்டால் அது அவனுடைய உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண்டுகொண்ட அவனுக்கு எளிய தீர்வாக கண்டுகொண்டது தான் நடைபயிற்சி.     அனைத்து வித பொருட்களும் நகரத்தில் மட்டுமே கிடைக்குமாகையால் கிராம மக்கள் நகரை நோக்கி அவ்வப்பொழுது படையெடுத்து கொண்டே இருந்த காலம் இப்பொழுது இல்லை.  வீட்டிற்கே டெலிவரி என்பது மிக இயல்பான ஒன்றாகி விட்ட காலகட்டாத்தில் திருநெல்வேலி இருட்டுகடை அல்வா உண்ண திருநெல்வேலி வந்து அங்கே கடையில் வரிசையில் நின்று வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.  அவர்களின் வலைதளம் சென்று ஆன்லைன் ஆர்டர் போட்டால் ஒரிரு நாட்களில் அல்வா வீட்டிற்கே வந்துவிடுகிறது.  இது சரியா தவறா என வாதமே ஏற்க முடியாததை போல...

ஏன் எழுத தவிர்க்கிறேன்... சுய புலம்பல்

     கடைசியாக எப்பொழுது எழுதினேன் என எடுத்து பார்த்ததில் சரியாக 6 மாதமாக எதுவும் எழுதாமல் இருக்கிறேன் என தெரிந்தது.  பல வருடங்களுக்கு முன்னரே பிளாக் எழுத ஆரம்பித்து விட்டேன் எனும் போதிலும், டிராஃப்டில் போட்டு விட்டு அதன் பின்னர் டெலிட் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தேன். இப்பொழுது பயன்படுத்தி கொண்டிருக்கும் பிளாக் இரண்டு வருடங்களாக இருக்கிறது.  முன்பு பயன்படுத்திய இரண்டு பிளாக்ம் இப்பொழுது பயன்படுத்துவது இல்லை.      நகைச்சுவையாகவோ, அதீத சிந்தனையோ, ரசனையோ என்னுடைய எழுத்தில் இருக்கிறதா எனும் கேள்வி இன்னமும் மனதில் ஓடிக்கொண்டு தான் உள்ளது.  இனிமேல் மாற்ற வேண்டுமா என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவும் இல்லை.  ஆனாலும் மனதில் பட்டதை எழுதியே ஆக வேண்டுமா? என்றால் இல்லை என்பதே பதில்.  இத்தனையையும் கடந்து ஏன் எழுத வேண்டும் என்பதற்கு ஏற்பான பதில் ஒன்று தான் உள்ளது... அது என்னுடைய வாழ்நாள் விருப்பம். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சுற்றுப்பகுதி     நான் எழுதியதை இன்னொருவர் வாசிக்க வாய்ப்பு இருக்கிறதே என்கிற எண்ணம் வரும...

Disney's Snow White

      திரைபடங்களின் முக்கிய பார்வையே அனைத்தையும் அழகாக திரையில் காட்டுவதுதான், அதிலும் fantasy கதை எனும் போது வழக்கத்தை விட அழகு சற்று தூக்கலாகவே இருக்கும்.  மேக்கப் போடாதது போல இருந்தாலும் அப்பொழுதுதான் கழுவியது போலான முகம், lipstick இருப்பது போல் தெரியவில்லை, வெட்டபட்ட முடி, சிறிது கசங்கிய உடை. இதனை உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் snow white ஆல் முடியும்.  போலவே தேர்ந்த மேக்கப், அசத்தலான உடை, அளந்து நறுக்கப்பட்ட நகம் இதனுடன் கருப்பு shade சேர்த்து Snow Whiteன் சித்தி எனும்  வில்லியை இரண்டாவது உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் அதற்கும் இடம் உண்டு.      ஒரு நாடு அதற்கு ராஜா, ராணி அவர்களுக்கு பனிபுயலின் சமயம் இன்முகத்துடன் பிறந்த ஒரு பெண் குழந்தை, அந்த குழந்தை தான் Snow White.  அந்த நாட்டு குடிமக்கள் கூட்டமாக சேர்ந்து, ஆப்பிளை பறித்து தோலை சீவி சுவையான  pie சமைத்து ஒன்றாக ஆடி, பாடி pie உடன் அன்பினையும் பகிர்ந்து அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.     வாழ்வில் இன்பம் என்பது ஒரு பகுதி போல் துன்பமும் ஒரு பகுதி என்பதிற்கு ஏற...

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா,  அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு  அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.      பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்...    ...

புத்தகப் பருவம்... (பூமர்)

புத்தகம் நமக்காகான  ஒரு உலகத்தை நோக்கி (பெற்றோர், நண்பர்களை தாண்டி) பயணிக்க உதவும் வாகனம் என்பதே என் எண்ணம். நான் கூறுவது கண்டிப்பாக பாடம் புத்தகத்தை அல்ல.  வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில பகுதியை பாடப்புத்தகங்களில் செலவழிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட அடிப்படை ஒன்று. எந்த வீட்டிலும் பதின்வயது பிள்ளைகளை கதை புத்தகத்தையோ, சமூக கட்டுரைகளையோ, நாவலையோ அல்லது வார, மாத இதழ்களை கூட படிக்க அனுமதிப்பதே இல்லை. மாற்றாக பாடப்புத்தகத்தை மட்டும் கையில் திணித்து, படிப்பது இனி உன் பொறுப்பு என தாங்கள் தங்கள் கடமையை சரிவர செய்து விட்டதாக எண்ணுகின்றனர். அந்த பருவத்தில் தான் அவர்களுக்கு எதிர்கால கனவுகள் ஆரம்பிக்கும்.  அப்பொழுதுதான் உலகில் நடக்கும் பொது விஷயங்களில் ஆர்வம் மேலோங்கும். தனக்கு பிடித்தது என்பது மட்டுமல்லாது, தனக்கு எது கை வரும் என்பதும் புரிய ஆரம்பிக்கும் நேரம்.  ஆனால், அப்பொழுது அவர்கள் மதிப்பெண் எனும் மாரத்தனில் ஓடிக் கொண்டிருப்பார்கள். பதின் பருவம்தான் விரும்பிய துறை சார்ந்த ஒன்றில் நுழைந்து வருங்காலத்தில் சாதிக்கும் முயற்சியை துவக்கும் பருவம்.  அதில் அவர்க...

ஒரு பயணம்...

முந்தைய வருட தீபாவளி பயணம்⛆  ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தவிர்த்துக் கொண்டிருந்தேன் போலவே சேர்த்துக் கொண்டும் இருந்தேன், எளிய தீபாவளி பயணத்தின் முன்னேற்பாடாக... தூரம் 481 கிமீ என்பது கூகுளின் தெரிவு. இன்னும் இருபதை கூட்டிக் காண்பித்தது என் odometer, பயண நிறைவில். Club வகையறாக்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மேலும், இது தனிப்பட்ட பயணமும் கூட. ஆகையால், நிதானத்தை முன்னேற்பாட்டில் பிரதானமாக வைத்திருந்தேன். தேவைகளும் வண்டியும் தயார்! இறுதியில் Petrol tank Bag மட்டுமே போதுமானதாக இருந்தது. Back Bagஐ கவனமாக தவிர்த்துவிட்டேன். Jerkin, gloves, earpiece, shoe சகிதமாக அனைத்து வசதிகளுடன் கிளம்பினேன். ஒரு சில கவனக்குறைவுகளால், கடந்த பயணம் நிறைய யோசிக்க வைத்திருந்தது. ஒப்பீட்டளவில் இம்முறை பயணம் ராஜபாட்டை என்றெண்ணமே நிறைவை கொடுத்தது. நான் racerம் கிடையாது. இப்பயணம் கட்டாயமும் கிடையாது. இந்த பயணம் ஒரு மாறுதலுக்காக மட்டுமே என்பதை மீண்டுமொருமுறை மனதிலிருத்திக் கொண்டேன். நான் Rider, அவ்வளவே! ராஜாவைப் போல பயணம் என்பதில் வருணனுக்கு சற்று மாற்றுக் கருத்து ஏற்பட்டது போலும். ...

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

90's கிட்

  டீக்கடை, காலை 6:30...   இன்னும் எத்தனை காலத்துக்கு சைக்கிளை மிதித்து கொண்டிருப்பாயென அவரை ஒருவர் இடைமறிக்கும் போதுதான் கவனிக்க நேர்ந்தது.   அவரின் தோற்றத்தை வைத்து வயது 30+ என சொல்லலாம்.   இல்லண்ணே என ஆரம்பித்த அவர், இதுவே போதுமானதாக இருப்பதாக அர்த்தமளிக்கும் ஒன்றினை அவர் பேசி முடிக்கும் போது என் டீ ஆறிவிட்டது.   ஒரே விஷயத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதமாக சொன்னார்.   அது முற்றிலும் இயலாமை சம்பந்தபட்ட விஷயம்.   வார்த்தைகளின் ஊடே அந்த இயலாமை மறைந்து இருந்தது, அவரின் பேச்சின் வீரியத்திற்கு பயந்து வெளிவர தயங்கியது என்பதே உண்மை. வண்டியை பற்றிய பேச்சு இப்பொழுது கல்யாணம் நோக்கி திரும்பியது.  வரும் மாரியம்மன் கோவில் பொங்கலுக்குள் கல்யாணம் பண்ணி ஜோடியாக இதே ரோட்டில் அப்படி கெத்தா நடப்பேன் பாருங்கன்னு அவர் சொல்லும் தொனிக்கு கண்கள் சிறிது கலங்கியது என்னமோ உண்மை.  எப்படி என விளக்க தெரியவில்லை, காரணமும் புரியவில்லை. தன் அண்ணனின் கல்யாணத்தில் லட்சம் செலவானதென வருத்தப்பட்டார்.  கோடீஸ்வரன் கல்யாணத்துல கூட பாதாம் பால் வைக்க மாட்டாங்க.  ஆனா, ...

ரயில் பயணம் ...

குழந்தைகளுக்கே உரித்தான கன்னமது, கொழுக்மொழுக்கென.  பால் கன்னம் என்பார்கள்.  குழந்தைகளின் கன்னங்கள் கிள்ளப்படுவதற்கான முக்கிய காரணி, அவனுக்கும் இருந்தது. இரண்டு வயதிற்கு மேல் இருந்திருக்காது, அவனுடைய அண்ணனும் அம்மாவும் ஜன்னலே கதி என்று கிடக்க, சீட்டில் இவனுக்கு இடம் தாராளமாக இருந்தது. கங்கை கொண்ட சோழபுரம் கையில் கவர் பிரிக்காத ஒரு சாக்லேட் வைத்துக்கொண்டு எங்களுக்கு வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். என்னையும் சேர்த்து நால்வரின் கவனமும் அவன் மீது இருந்ததை   கண்ட  அவனது அம்மா நாங்கள் பார்த்து கொள்வோம் என்றெண்ணி அதன் பின்னர் அவனை கண்டுகொள்ளவில்லை.  அவனுடைய அம்மாவும், அவரது இன்னொரு மகனும் சேர்ந்து ஜன்னலிடம் கதை பேசிக் கொண்டிருந்தனர்.  பின்னர், இருவர் கூட்டணியில் மூன்றாவதாக அவனும் இணைந்து கொண்டான்.  அது இவ்வளவு நேரம் எங்கே மறைந்திருந்தது எங்கிருந்து வந்தது என யோசிக்க கூட எங்களுக்கு அவன் அவகாசம் கொடுக்கவில்லை.  ஆம், அவன் தூங்கிவிட்டான். திண்டுக்கல் ரயில் நிலையம்!? அங்கே மழை பெய்து கொண்டிருந்தது, பெய்து கொண்டே இருந்தது... வருணனுக்கு அன்று மனநிலையில் சி...

அவள் ஒரு தொடர்கதை...

கனவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்  யாருக்கும் தன் கனவு தெரியாதென மமதையில் சுற்றி கொண்டிருக்கிறாள்  செஞ்சி கோட்டை மலை மேலே அனைவருக்கும் அவள் கனவை தெரியும்  அவர்கள் யாரும் காட்டிக்கொள்வதில்லை  கனவை தெரியுமென காட்டிக்கொள்ள கூடாதென்பது பெரியவர்களுக்கே உரித்தான ஒன்று போல  அறிவாளியான அவளும் கண்டு கொள்வாள் இவர்களின் நிலைப்பாட்டை  எனக்கு தெரியும்  இவளும் காட்டிக்கொள்ள மாட்டாள்!