Showing posts with label நான் பார்த்த திரைப்படங்கள். Show all posts
Showing posts with label நான் பார்த்த திரைப்படங்கள். Show all posts

Friday, 20 June 2025

Disney's Snow White

     திரைபடங்களின் முக்கிய பார்வையே அனைத்தையும் அழகாக திரையில் காட்டுவதுதான், அதிலும் fantasy கதை எனும் போது வழக்கத்தை விட அழகு சற்று தூக்கலாகவே இருக்கும்.  மேக்கப் போடாதது போல இருந்தாலும் அப்பொழுதுதான் கழுவியது போலான முகம், lipstick இருப்பது போல் தெரியவில்லை, வெட்டபட்ட முடி, சிறிது கசங்கிய உடை. இதனை உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் snow white ஆல் முடியும்.  போலவே தேர்ந்த மேக்கப், அசத்தலான உடை, அளந்து நறுக்கப்பட்ட நகம் இதனுடன் கருப்பு shade சேர்த்து Snow Whiteன் சித்தி எனும் வில்லியை இரண்டாவது உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் அதற்கும் இடம் உண்டு.

    ஒரு நாடு அதற்கு ராஜா, ராணி அவர்களுக்கு பனிபுயலின் சமயம் இன்முகத்துடன் பிறந்த ஒரு பெண் குழந்தை, அந்த குழந்தை தான் Snow White.  அந்த நாட்டு குடிமக்கள் கூட்டமாக சேர்ந்து, ஆப்பிளை பறித்து தோலை சீவி சுவையான pie சமைத்து ஒன்றாக ஆடி, பாடி pie உடன் அன்பினையும் பகிர்ந்து அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.

    வாழ்வில் இன்பம் என்பது ஒரு பகுதி போல் துன்பமும் ஒரு பகுதி என்பதிற்கு ஏற்ப சில சம்பவங்கள் நடக்கின்றன;  நோய் வாய்ப்பட்டு  ராணி இறக்கிறார், பின்னர் ராஜா ஒரு அழகியை மணமுடிக்கிறார், அன்றொருநாள் போருக்கு புறப்பட்ட ராஜா அரண்மனை திரும்பவில்லை.  நாட்டின் சூழல் தலைகீழாக மாறுகிறது.

    Snow White சித்தி ராணி ஆகிறார், எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அந்நாட்டின் இளவரசி Snow White கோட்டையின் வேலைக்காரி ஆகிறார்.  சித்திக்கு தன்னுடைய அழகின் மேல் கர்வம் எப்பொழுதும் உண்டு.  தான் உலக அழகி என்பதை உறுதி செய்ய ஒரு மாயாஜால கண்ணாடியை வைத்திருந்தார்.  அவ்வளவு காலமும் ராணியையே உலக அழகி என உறுதி செய்து கொண்டிருந்த மாய கண்ணாடி அன்று தன் நிலைப்பாட்டை மாற்றியது.

    ஏன் தெரியுமா... Snow White தன் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருக்கும் போது ஒரு திருடனை பார்த்து விடுகிறார், இளவரசி என அறியாத அந்த திருடனும் சகஜமாக பேசுகிறான்.  நாட்டின் நிலையையும், மக்களின் தேவையையும் பற்றி பேசிக் கொண்டு நகர்கிறான்.  கோட்டை வீரர்கள் அவனை பிடித்து விட, பசியின் காரணமாகவே அவன் திருடியிருக்கிறான் எனவும், மன்னித்து விட்டு விடலாம் என இளவரசி ராணியை கேட்டு கொள்ள, கடுப்பான ராணி எந்த உணவும் கொடுக்காமல் அந்த திருடனை வாயிற் கதவில் கட்டிப் போட உத்தரவிடுகிறார்.  பதறிய இளவரசி பின்னர் யாருக்கும் தெரியாமல் அவனை விடுவித்து விடுகிறார்.  இளவரசியின் கனிவான குணமும், உதவும் மனமும் மாயாஜால கண்ணாடியை அதன் முடிவில் இருந்து மாற வைக்கிறது.

    உலக அழகி தான் என எண்ணிய ராணியின் கர்வத்தை அழிப்பது போல இச்சம்பவம் அமைந்து விடுகிறது.  போதிலும் ராணி ஸ்னோ ஒயிட்டை போல மாற எண்ணாமல் கொல்ல ஆள் அனுப்பி அந்த வீரனும் இளவரசியை கொல்ல விரும்பாமல் எங்காவது ஓடிச் செல்லும் படி கூறி விட்டு, தான் கொன்று விட்டாதாக ராணியிடம் பொய் சொல்லி விடுகிறார்.

    தன்னுடைய உயிரை காப்பாற்றி கொள்ள காட்டினுள் சென்ற இளவரசியின்  கண்ணில் seven dwarfs (ஏழு குள்ளர்கள்) வீடு தென்படுகிறது.  அங்கு சென்று தங்குகிறாள்.  அவர்களுக்கு பூமியை குடைந்து வைரம் முதலான கற்கள் எடுப்பதுதான் வேலை.  சுருங்கச் சொன்னால் சுரங்க தொழிலாளர்கள்.

    இளவரசியை கண்டு முதலில் அஞ்சும் seven dwarfs பின்னர் அவளின் அன்பினில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.  எனினும் ராணியின் கோபம் தங்களை தாக்கும் அபாயம் இருப்பதால் இளவரசிக்கு தற்காலிக accomodation மட்டுமே கொடுக்கிறார்கள்.  அதுவே அவளுக்கும் போதுமானதாக இருக்கிறது.

    ராணியிடம் வீரன் பொய் சொன்னாலும் மாயக் கண்ணாடி இளவரசியின் இருப்பை உறுதி செய்து விடுகிறது.  கடுங்கோபம் கொண்ட ராணி தானே கொல்ல விளைகிறாள்.  இதனிடையே முன்பு அறிமுகமான திருடனை இளவரசி காட்டினுள் சந்திக்க நேரிடுகிறது.  அவனும் இளவரசிக்கு உதவி செய்ய முற்படுகிறான்.  தன்னுடைய நாட்டிற்கு விடிவு காலம் (முன்பு போல கூட்டமாக சேர்ந்து ஆப்பிள் pie செய்து சாப்பிடுவது) வேண்டுமென்றால் நாடு இளவரசியின் ஆளுகைக்கு உட்பட வேண்டும் என்பதே அவனது எண்ணம்.

    ராணியின் கொலை திட்டம்... மாறுவேடம் பூண்ட ராணி விஷம் கலந்த  ஆப்பிள் ஒன்றினை இளவரசியிடம் கொடுத்து சாப்பிட வைக்கிறாள்.  அவளது முயற்சி பலிக்கிறது, இளவரசி மூர்ச்சை அடைகிறாள்.  இதிலிருந்து தப்பிக்க உண்மையான அன்புடன் ஒருவர் கொடுக்கும் முத்தம் அவசியம் (காலக் கொடும ஹரி).  இதனை அறியா seven dwarfs அவளை எரிக்க முற்படுகிறார்கள்.   அங்கு சரியான நேரத்தில் வந்த திருடன் இளவரசியை தன் காதல் முத்தத்தால் காப்பாற்றுகிறான்.

    போர் ஒன்றுதான் தீர்வு என்றெண்ணி இளவரசி தன்னுடன் இருப்பவர்களை மட்டும் வைத்து தலைநகரை நோக்கி படையெடுக்கிறாள்; உடன் மக்களும் சேர்ந்து கொள்கின்றனர்.  எனினும் ராணியை எதிர்த்து போர் என்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்த அவள் போர் வீரர்களிடம் பேசுகிறாள்; ராணியை போல் அல்லாது அன்புடனும், அக்கறையுடனும் பேசும் இளவரசியை அனைவரும் ஏற்றுக் கொள்ள சண்டையே இல்லாமல் போரில் வெற்றி பெறுகிறாள்.  ராணியை வெளியேற்றி விட்டு, மீண்டும் மக்கள் ஆடல், பாடல், pie என சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கிறரர்கள்.  சுபம்!!!

Disney's Snow White

      திரைபடங்களின் முக்கிய பார்வையே அனைத்தையும் அழகாக திரையில் காட்டுவதுதான், அதிலும் fantasy கதை எனும் போது வழக்கத்தை விட அழகு சற்று தூக்க...