Skip to main content

ஏன் எழுத தவிர்க்கிறேன்... சுய புலம்பல்

    கடைசியாக எப்பொழுது எழுதினேன் என எடுத்து பார்த்ததில் சரியாக 6 மாதமாக எதுவும் எழுதாமல் இருக்கிறேன் என தெரிந்தது.  பல வருடங்களுக்கு முன்னரே பிளாக் எழுத ஆரம்பித்து விட்டேன் எனும் போதிலும், டிராஃப்டில் போட்டு விட்டு அதன் பின்னர் டெலிட் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தேன். இப்பொழுது பயன்படுத்தி கொண்டிருக்கும் பிளாக் இரண்டு வருடங்களாக இருக்கிறது.  முன்பு பயன்படுத்திய இரண்டு பிளாக்ம் இப்பொழுது பயன்படுத்துவது இல்லை.

    நகைச்சுவையாகவோ, அதீத சிந்தனையோ, ரசனையோ என்னுடைய எழுத்தில் இருக்கிறதா எனும் கேள்வி இன்னமும் மனதில் ஓடிக்கொண்டு தான் உள்ளது.  இனிமேல் மாற்ற வேண்டுமா என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவும் இல்லை.  ஆனாலும் மனதில் பட்டதை எழுதியே ஆக வேண்டுமா? என்றால் இல்லை என்பதே பதில்.  இத்தனையையும் கடந்து ஏன் எழுத வேண்டும் என்பதற்கு ஏற்பான பதில் ஒன்று தான் உள்ளது... அது என்னுடைய வாழ்நாள் விருப்பம்.

கங்கை கொண்ட சோழபுரம்
கோவில் சுற்றுப்பகுதி

    நான் எழுதியதை இன்னொருவர் வாசிக்க வாய்ப்பு இருக்கிறதே என்கிற எண்ணம் வரும்பொழுதே ஒரு கிக் வருகிறது.  ஆனால் அதனை தொடர்ந்து அது நன்றாக இருக்க வேண்டுமே எனும் எண்ணம் அந்த கிக்கை முழுதுமாக வற்ற செய்து விடுகிறது.  ஆக எழுதுவதும், அதனை டிராஃப்டில் போடுவதும் பின்னர் டெலிட் செய்வதும் இல்லையேல் போஸ்ட் செய்த சில தினங்களில் டெலில் செய்வதும் என வாடிக்கை நிகழ்வாகி விட்டது. இதுவும் கூட போன வாரம் எழுத ஆரம்பித்து ஒரு பேராவுடன் டிராஃப்டில் போட்டு இன்று எடுக்கிறேன்.  காசு கொடுத்து ப்ளாக் அட்ரஸ் வாங்கி கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது.

    நான் அவ்வளவாக யாருடனும் பேசுவதும் கிடையாது, பெர்சனல் விஷயங்களை பகிர்வதும் கிடையாது.  எங்கேனும் வெளி இடங்களுக்கு செல்லும்போதும் புகைப்படம் எடுப்பது கூட கிடையாது (இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் எடுக்கிறேன்).  இது சரியா தவறா என வினா எழும்பொழுது தவறு எனும் விடை எனக்கு ஜட்ஜ்மெண்டலாக தெரிவதில்லை.  ஆக இனிமேல் வாரம் இருமுறையேனும் பிளாக் எழுத வேண்டும், இல்லையேல் அடுத்தமுறை சப்ஸ்கிரிப்ஷன் நீட்டிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.

   

தனி நபர் தகவல்களை தவிர்த்த டைரியாக இருக்கலாம், பார்த்த படத்தின் விமர்சனமாக இருக்கலாம், முன்பு நடந்த வாழ்க்கை சம்பவங்களாக இருக்கலாம், என்னுடைய பயண அனுபவமாக இருக்கலாம், சமூகத்தில் நடக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தில் என்னுடைய பார்வையையும் சேர்க்கலாம்.  இவ்வாறு நிறைய லாம்கள் உள்ளன.  அதனை எழுத்தின் மூலம் மடைமாற்றி இதில் சேர்ப்பேனா? அல்லது மீண்டும் என் காம்ப்ளக்ஸ் நான் எழுதுவதை தவிர்க்க காரணமாகுமா? என்பதை காலத்தின் கையில் விட்டு இதனை போஸ்ட் செய்கிறேன்.

Comments

Popular posts from this blog

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

ஒரு பயணம்...

முந்தைய வருட தீபாவளி பயணம்⛆  ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தவிர்த்துக் கொண்டிருந்தேன் போலவே சேர்த்துக் கொண்டும் இருந்தேன், எளிய தீபாவளி பயணத்தின் முன்னேற்பாடாக... தூரம் 481 கிமீ என்பது கூகுளின் தெரிவு. இன்னும் இருபதை கூட்டிக் காண்பித்தது என் odometer, பயண நிறைவில். Club வகையறாக்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மேலும், இது தனிப்பட்ட பயணமும் கூட. ஆகையால், நிதானத்தை முன்னேற்பாட்டில் பிரதானமாக வைத்திருந்தேன். தேவைகளும் வண்டியும் தயார்! இறுதியில் Petrol tank Bag மட்டுமே போதுமானதாக இருந்தது. Back Bagஐ கவனமாக தவிர்த்துவிட்டேன். Jerkin, gloves, earpiece, shoe சகிதமாக அனைத்து வசதிகளுடன் கிளம்பினேன். ஒரு சில கவனக்குறைவுகளால், கடந்த பயணம் நிறைய யோசிக்க வைத்திருந்தது. ஒப்பீட்டளவில் இம்முறை பயணம் ராஜபாட்டை என்றெண்ணமே நிறைவை கொடுத்தது. நான் racerம் கிடையாது. இப்பயணம் கட்டாயமும் கிடையாது. இந்த பயணம் ஒரு மாறுதலுக்காக மட்டுமே என்பதை மீண்டுமொருமுறை மனதிலிருத்திக் கொண்டேன். நான் Rider, அவ்வளவே! ராஜாவைப் போல பயணம் என்பதில் வருணனுக்கு சற்று மாற்றுக் கருத்து ஏற்பட்டது போலும். ...

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா,  அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு  அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.      பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்...    ...