Skip to main content

Posts

Showing posts with the label டைரி

ஏப்ரல் ஃபூல்…

  காலை எழுந்தபின் சந்திக்கும் சமயத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலான அம்மாவின் பார்வை சற்றே குழப்பத்தை கொடுத்தது என்ற போதிலும் தூக்கம் முற்றிலும் கலைந்த பின்னர்     என்பதாலோ என்னவோ உடனே நேற்றைய கடைசி பேச்சு நியாபகம் வந்தது.     வீட்டில் நடக்கும் எதனையும் பேசாமல் இருப்பதை பற்றியும் சற்றேறகுறைய நிரந்தரமாக தொடரும் விஷயத்தை பற்றியும் கேட்டதில் வாக்கிங் போக சொன்ன நீயே இப்பொழுது போக விடாமல் இருக்கிறாய் என விதண்டாவாதமாக ஆரம்பித்து ஐந்து நிமிடம் என சொல்லி இவ்வளவு நேரம் (12 நிமிடம் கூடுதலாக) என சொன்னவுடன் பேச்சு அப்படியே அறுந்து போனது.     இதிலொரு செய்தி என்னவென்றால் வழக்கமாக இப்படி நடக்கும் சமயத்தில் நூலறுந்த காத்தாடி போலான அலைபாயும் மனநிலையே வாரக்கணக்கில் நீடிக்கும் என்ற நிலை போய் அடுத்தநாள் காலையே அதனை கடந்து விட்டேன் என்பதில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி.     இது தொடருமாவென தெரியாதே என்கிற எண்ண ஓட்டத்தில் காலண்டர் பார்க்க ஏப்ரல் ஃபூல் என உள்ளிருந்து ஒரு குரல் கத்த எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.     இந்த நாள் இனிய நாள்.

விடை தரும் கனவு

      கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை.  தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள். செஞ்சி கோட்டை      கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்.     சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன்.  காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன்.  2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள். அக்கால கொடூர கனவுகளிலிர...

முக்கியத்துவமென போதிக்கப்பட்டவர்கள்

முதல் நான்கு முக்கியத்துவத்தில் இரண்டாமவர் கிரிக்கெட் ஆர்வம் மிக அதிகம் வாரயிறுதி மேட்ச் பொழுதுகளில் அவர் தடையற பார்க்க நாங்கள் வீட்டினை விட்டு வெளியேற வேண்டும் நாங்கள் வெளியெ செல்ல வற்புறுத்தும் அளவுக்கு அவரை கொண்டுசெல்லக்கூடாதென்பது புரிந்தநாள் ஒரு ஞாயிறு மாலை வீட்டிலிருந்தால் அமைதியாக இருக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழு மற்றும் மூன்று வயதுகளுக்கு புரியாமல் போனதில் வியப்பில்லை அதன் பின்னர் முப்பதை நெருங்கிய ஒன்றும் முப்பதை தாண்டிய இன்னொன்றும் அமைதியாக இருக்கவில்லை இப்பொழுது பிந்தையதை தாண்டிய முந்தைய மூன்றும் ஏழும் அமைதியாக இருக்கின்றன! கார்த்திகை மாதம் ஓர் அழகிய மாதம் கடவுளின் ஏற்பின் காரணமாகவென்பது இப்பொழுதும் எனக்கு ஏற்பில்லை இருந்தபோதும் அந்த நாட்கள் ஓர் அழகியல் விருப்பமாக இருந்ததா என்ற கேள்விக்கு விடையில்லை சிலவற்றை ஏற்கத்தான் வேண்டும் முயற்சிக்க முயற்சித்தேன் காலமும் கட்டாயமும் ஒன்றானது கிரிக்கெட் கிடைத்தது அழகியலுக்கு விடையும் கிடைத்தது நேரம் பரிபோய்விட்டது முதல் நான்கு முக்கியத்துவத்தில் முதன்மையானவர் மூன்றாம் முக்கியத்துவத்தில் நம்பிக்கை மிக அதிகம் வார நாட்கள் எண்ணிக்கையும் கோவ...

நடை பயில்வோமா...

    தன்னுடைய தின தேவைகளுக்கான தேடலில் நாடோடிகளாக வாழ்ந்த காலம் போய் ஒவ்வொரு தேவைகளாய் தீர்த்து, இன்றைய காலகட்டத்தில் நாகரீக மனிதன் அறிவு தேடல் தவிர்த்த ஏனைய பலவற்றில் தன்னுடைய தேவைகளை கிட்டதட்ட பூர்த்தி செய்து கொண்டான்.  அவனுடைய அறிவு தேடலில் அதிகம் வேலை செய்வதில் மூளை முதலிடத்தை எடுத்து கொள்கிறது.  கால்களும், கைகளும்  தன்னுடைய செயல்பாடுகளை குறைத்து கொண்டால் அது அவனுடைய உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண்டுகொண்ட அவனுக்கு எளிய தீர்வாக கண்டுகொண்டது தான் நடைபயிற்சி.     அனைத்து வித பொருட்களும் நகரத்தில் மட்டுமே கிடைக்குமாகையால் கிராம மக்கள் நகரை நோக்கி அவ்வப்பொழுது படையெடுத்து கொண்டே இருந்த காலம் இப்பொழுது இல்லை.  வீட்டிற்கே டெலிவரி என்பது மிக இயல்பான ஒன்றாகி விட்ட காலகட்டாத்தில் திருநெல்வேலி இருட்டுகடை அல்வா உண்ண திருநெல்வேலி வந்து அங்கே கடையில் வரிசையில் நின்று வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.  அவர்களின் வலைதளம் சென்று ஆன்லைன் ஆர்டர் போட்டால் ஒரிரு நாட்களில் அல்வா வீட்டிற்கே வந்துவிடுகிறது.  இது சரியா தவறா என வாதமே ஏற்க முடியாததை போல...