Skip to main content

Posts

Showing posts with the label டைரி

நடை பயில்வோமா...

    தன்னுடைய தின தேவைகளுக்கான தேடலில் நாடோடிகளாக வாழ்ந்த காலம் போய் ஒவ்வொரு தேவைகளாய் தீர்த்து, இன்றைய காலகட்டத்தில் நாகரீக மனிதன் அறிவு தேடல் தவிர்த்த ஏனைய பலவற்றில் தன்னுடைய தேவைகளை கிட்டதட்ட பூர்த்தி செய்து கொண்டான்.  அவனுடைய அறிவு தேடலில் அதிகம் வேலை செய்வதில் மூளை முதலிடத்தை எடுத்து கொள்கிறது.  கால்களும், கைகளும்  தன்னுடைய செயல்பாடுகளை குறைத்து கொண்டால் அது அவனுடைய உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண்டுகொண்ட அவனுக்கு எளிய தீர்வாக கண்டுகொண்டது தான் நடைபயிற்சி.     அனைத்து வித பொருட்களும் நகரத்தில் மட்டுமே கிடைக்குமாகையால் கிராம மக்கள் நகரை நோக்கி அவ்வப்பொழுது படையெடுத்து கொண்டே இருந்த காலம் இப்பொழுது இல்லை.  வீட்டிற்கே டெலிவரி என்பது மிக இயல்பான ஒன்றாகி விட்ட காலகட்டாத்தில் திருநெல்வேலி இருட்டுகடை அல்வா உண்ண திருநெல்வேலி வந்து அங்கே கடையில் வரிசையில் நின்று வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.  அவர்களின் வலைதளம் சென்று ஆன்லைன் ஆர்டர் போட்டால் ஒரிரு நாட்களில் அல்வா வீட்டிற்கே வந்துவிடுகிறது.  இது சரியா தவறா என வாதமே ஏற்க முடியாததை போல...