Skip to main content

Disney's Snow White

     திரைபடங்களின் முக்கிய பார்வையே அனைத்தையும் அழகாக திரையில் காட்டுவதுதான், அதிலும் fantasy கதை எனும் போது வழக்கத்தை விட அழகு சற்று தூக்கலாகவே இருக்கும்.  மேக்கப் போடாதது போல இருந்தாலும் அப்பொழுதுதான் கழுவியது போலான முகம், lipstick இருப்பது போல் தெரியவில்லை, வெட்டபட்ட முடி, சிறிது கசங்கிய உடை. இதனை உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் snow white ஆல் முடியும்.  போலவே தேர்ந்த மேக்கப், அசத்தலான உடை, அளந்து நறுக்கப்பட்ட நகம் இதனுடன் கருப்பு shade சேர்த்து Snow Whiteன் சித்தி எனும் வில்லியை இரண்டாவது உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் அதற்கும் இடம் உண்டு.

    ஒரு நாடு அதற்கு ராஜா, ராணி அவர்களுக்கு பனிபுயலின் சமயம் இன்முகத்துடன் பிறந்த ஒரு பெண் குழந்தை, அந்த குழந்தை தான் Snow White.  அந்த நாட்டு குடிமக்கள் கூட்டமாக சேர்ந்து, ஆப்பிளை பறித்து தோலை சீவி சுவையான pie சமைத்து ஒன்றாக ஆடி, பாடி pie உடன் அன்பினையும் பகிர்ந்து அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.

    வாழ்வில் இன்பம் என்பது ஒரு பகுதி போல் துன்பமும் ஒரு பகுதி என்பதிற்கு ஏற்ப சில சம்பவங்கள் நடக்கின்றன;  நோய் வாய்ப்பட்டு  ராணி இறக்கிறார், பின்னர் ராஜா ஒரு அழகியை மணமுடிக்கிறார், அன்றொருநாள் போருக்கு புறப்பட்ட ராஜா அரண்மனை திரும்பவில்லை.  நாட்டின் சூழல் தலைகீழாக மாறுகிறது.

    Snow White சித்தி ராணி ஆகிறார், எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அந்நாட்டின் இளவரசி Snow White கோட்டையின் வேலைக்காரி ஆகிறார்.  சித்திக்கு தன்னுடைய அழகின் மேல் கர்வம் எப்பொழுதும் உண்டு.  தான் உலக அழகி என்பதை உறுதி செய்ய ஒரு மாயாஜால கண்ணாடியை வைத்திருந்தார்.  அவ்வளவு காலமும் ராணியையே உலக அழகி என உறுதி செய்து கொண்டிருந்த மாய கண்ணாடி அன்று தன் நிலைப்பாட்டை மாற்றியது.

    ஏன் தெரியுமா... Snow White தன் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருக்கும் போது ஒரு திருடனை பார்த்து விடுகிறார், இளவரசி என அறியாத அந்த திருடனும் சகஜமாக பேசுகிறான்.  நாட்டின் நிலையையும், மக்களின் தேவையையும் பற்றி பேசிக் கொண்டு நகர்கிறான்.  கோட்டை வீரர்கள் அவனை பிடித்து விட, பசியின் காரணமாகவே அவன் திருடியிருக்கிறான் எனவும், மன்னித்து விட்டு விடலாம் என இளவரசி ராணியை கேட்டு கொள்ள, கடுப்பான ராணி எந்த உணவும் கொடுக்காமல் அந்த திருடனை வாயிற் கதவில் கட்டிப் போட உத்தரவிடுகிறார்.  பதறிய இளவரசி பின்னர் யாருக்கும் தெரியாமல் அவனை விடுவித்து விடுகிறார்.  இளவரசியின் கனிவான குணமும், உதவும் மனமும் மாயாஜால கண்ணாடியை அதன் முடிவில் இருந்து மாற வைக்கிறது.

    உலக அழகி தான் என எண்ணிய ராணியின் கர்வத்தை அழிப்பது போல இச்சம்பவம் அமைந்து விடுகிறது.  போதிலும் ராணி ஸ்னோ ஒயிட்டை போல மாற எண்ணாமல் கொல்ல ஆள் அனுப்பி அந்த வீரனும் இளவரசியை கொல்ல விரும்பாமல் எங்காவது ஓடிச் செல்லும் படி கூறி விட்டு, தான் கொன்று விட்டாதாக ராணியிடம் பொய் சொல்லி விடுகிறார்.

    தன்னுடைய உயிரை காப்பாற்றி கொள்ள காட்டினுள் சென்ற இளவரசியின்  கண்ணில் seven dwarfs (ஏழு குள்ளர்கள்) வீடு தென்படுகிறது.  அங்கு சென்று தங்குகிறாள்.  அவர்களுக்கு பூமியை குடைந்து வைரம் முதலான கற்கள் எடுப்பதுதான் வேலை.  சுருங்கச் சொன்னால் சுரங்க தொழிலாளர்கள்.

    இளவரசியை கண்டு முதலில் அஞ்சும் seven dwarfs பின்னர் அவளின் அன்பினில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.  எனினும் ராணியின் கோபம் தங்களை தாக்கும் அபாயம் இருப்பதால் இளவரசிக்கு தற்காலிக accomodation மட்டுமே கொடுக்கிறார்கள்.  அதுவே அவளுக்கும் போதுமானதாக இருக்கிறது.

    ராணியிடம் வீரன் பொய் சொன்னாலும் மாயக் கண்ணாடி இளவரசியின் இருப்பை உறுதி செய்து விடுகிறது.  கடுங்கோபம் கொண்ட ராணி தானே கொல்ல விளைகிறாள்.  இதனிடையே முன்பு அறிமுகமான திருடனை இளவரசி காட்டினுள் சந்திக்க நேரிடுகிறது.  அவனும் இளவரசிக்கு உதவி செய்ய முற்படுகிறான்.  தன்னுடைய நாட்டிற்கு விடிவு காலம் (முன்பு போல கூட்டமாக சேர்ந்து ஆப்பிள் pie செய்து சாப்பிடுவது) வேண்டுமென்றால் நாடு இளவரசியின் ஆளுகைக்கு உட்பட வேண்டும் என்பதே அவனது எண்ணம்.

    ராணியின் கொலை திட்டம்... மாறுவேடம் பூண்ட ராணி விஷம் கலந்த  ஆப்பிள் ஒன்றினை இளவரசியிடம் கொடுத்து சாப்பிட வைக்கிறாள்.  அவளது முயற்சி பலிக்கிறது, இளவரசி மூர்ச்சை அடைகிறாள்.  இதிலிருந்து தப்பிக்க உண்மையான அன்புடன் ஒருவர் கொடுக்கும் முத்தம் அவசியம் (காலக் கொடும ஹரி).  இதனை அறியா seven dwarfs அவளை எரிக்க முற்படுகிறார்கள்.   அங்கு சரியான நேரத்தில் வந்த திருடன் இளவரசியை தன் காதல் முத்தத்தால் காப்பாற்றுகிறான்.

    போர் ஒன்றுதான் தீர்வு என்றெண்ணி இளவரசி தன்னுடன் இருப்பவர்களை மட்டும் வைத்து தலைநகரை நோக்கி படையெடுக்கிறாள்; உடன் மக்களும் சேர்ந்து கொள்கின்றனர்.  எனினும் ராணியை எதிர்த்து போர் என்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்த அவள் போர் வீரர்களிடம் பேசுகிறாள்; ராணியை போல் அல்லாது அன்புடனும், அக்கறையுடனும் பேசும் இளவரசியை அனைவரும் ஏற்றுக் கொள்ள சண்டையே இல்லாமல் போரில் வெற்றி பெறுகிறாள்.  ராணியை வெளியேற்றி விட்டு, மீண்டும் மக்கள் ஆடல், பாடல், pie என சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கிறரர்கள்.  சுபம்!!!

Comments

Popular posts from this blog

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

ஒரு பயணம்...

முந்தைய வருட தீபாவளி பயணம்⛆  ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தவிர்த்துக் கொண்டிருந்தேன் போலவே சேர்த்துக் கொண்டும் இருந்தேன், எளிய தீபாவளி பயணத்தின் முன்னேற்பாடாக... தூரம் 481 கிமீ என்பது கூகுளின் தெரிவு. இன்னும் இருபதை கூட்டிக் காண்பித்தது என் odometer, பயண நிறைவில். Club வகையறாக்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மேலும், இது தனிப்பட்ட பயணமும் கூட. ஆகையால், நிதானத்தை முன்னேற்பாட்டில் பிரதானமாக வைத்திருந்தேன். தேவைகளும் வண்டியும் தயார்! இறுதியில் Petrol tank Bag மட்டுமே போதுமானதாக இருந்தது. Back Bagஐ கவனமாக தவிர்த்துவிட்டேன். Jerkin, gloves, earpiece, shoe சகிதமாக அனைத்து வசதிகளுடன் கிளம்பினேன். ஒரு சில கவனக்குறைவுகளால், கடந்த பயணம் நிறைய யோசிக்க வைத்திருந்தது. ஒப்பீட்டளவில் இம்முறை பயணம் ராஜபாட்டை என்றெண்ணமே நிறைவை கொடுத்தது. நான் racerம் கிடையாது. இப்பயணம் கட்டாயமும் கிடையாது. இந்த பயணம் ஒரு மாறுதலுக்காக மட்டுமே என்பதை மீண்டுமொருமுறை மனதிலிருத்திக் கொண்டேன். நான் Rider, அவ்வளவே! ராஜாவைப் போல பயணம் என்பதில் வருணனுக்கு சற்று மாற்றுக் கருத்து ஏற்பட்டது போலும். ...

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா,  அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு  அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.      பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்...    ...