கனவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்
யாருக்கும் தன் கனவு தெரியாதென மமதையில் சுற்றி கொண்டிருக்கிறாள்
![]() |
| செஞ்சி கோட்டை மலை மேலே |
அனைவருக்கும் அவள் கனவை தெரியும்
அவர்கள் யாரும் காட்டிக்கொள்வதில்லை
கனவை தெரியுமென காட்டிக்கொள்ள கூடாதென்பது பெரியவர்களுக்கே உரித்தான ஒன்று போல
அறிவாளியான அவளும் கண்டு கொள்வாள் இவர்களின் நிலைப்பாட்டை
எனக்கு தெரியும்
இவளும் காட்டிக்கொள்ள மாட்டாள்!

Comments
Post a Comment