Skip to main content

Posts

Showing posts from March, 2026

விடை தரும் கனவு

      கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை.  தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள். செஞ்சி கோட்டை      கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்.     சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன்.  காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன்.  2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள். அக்கால கொடூர கனவுகளிலிர...

முக்கியத்துவமென போதிக்கப்பட்டவர்கள்

முதல் நான்கு முக்கியத்துவத்தில் இரண்டாமவர் கிரிக்கெட் ஆர்வம் மிக அதிகம் வாரயிறுதி மேட்ச் பொழுதுகளில் அவர் தடையற பார்க்க நாங்கள் வீட்டினை விட்டு வெளியேற வேண்டும் நாங்கள் வெளியெ செல்ல வற்புறுத்தும் அளவுக்கு அவரை கொண்டுசெல்லக்கூடாதென்பது புரிந்தநாள் ஒரு ஞாயிறு மாலை வீட்டிலிருந்தால் அமைதியாக இருக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழு மற்றும் மூன்று வயதுகளுக்கு புரியாமல் போனதில் வியப்பில்லை அதன் பின்னர் முப்பதை நெருங்கிய ஒன்றும் முப்பதை தாண்டிய இன்னொன்றும் அமைதியாக இருக்கவில்லை இப்பொழுது பிந்தையதை தாண்டிய முந்தைய மூன்றும் ஏழும் அமைதியாக இருக்கின்றன! கார்த்திகை மாதம் ஓர் அழகிய மாதம் கடவுளின் ஏற்பின் காரணமாகவென்பது இப்பொழுதும் எனக்கு ஏற்பில்லை இருந்தபோதும் அந்த நாட்கள் ஓர் அழகியல் விருப்பமாக இருந்ததா என்ற கேள்விக்கு விடையில்லை சிலவற்றை ஏற்கத்தான் வேண்டும் முயற்சிக்க முயற்சித்தேன் காலமும் கட்டாயமும் ஒன்றானது கிரிக்கெட் கிடைத்தது அழகியலுக்கு விடையும் கிடைத்தது நேரம் பரிபோய்விட்டது முதல் நான்கு முக்கியத்துவத்தில் முதன்மையானவர் மூன்றாம் முக்கியத்துவத்தில் நம்பிக்கை மிக அதிகம் வார நாட்கள் எண்ணிக்கையும் கோவ...