புத்தகம் நமக்காகான ஒரு உலகத்தை நோக்கி (பெற்றோர், நண்பர்களை தாண்டி) பயணிக்க உதவும் வாகனம் என்பதே என் எண்ணம்.
நான் கூறுவது கண்டிப்பாக பாடம் புத்தகத்தை அல்ல. வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில பகுதியை பாடப்புத்தகங்களில் செலவழிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட அடிப்படை ஒன்று.
எந்த வீட்டிலும் பதின்வயது பிள்ளைகளை கதை புத்தகத்தையோ, சமூக கட்டுரைகளையோ, நாவலையோ அல்லது வார, மாத இதழ்களை கூட படிக்க அனுமதிப்பதே இல்லை.
மாற்றாக பாடப்புத்தகத்தை மட்டும் கையில் திணித்து, படிப்பது இனி உன் பொறுப்பு என தாங்கள் தங்கள் கடமையை சரிவர செய்து விட்டதாக எண்ணுகின்றனர்.
அந்த பருவத்தில் தான் அவர்களுக்கு எதிர்கால கனவுகள் ஆரம்பிக்கும். அப்பொழுதுதான் உலகில் நடக்கும் பொது விஷயங்களில் ஆர்வம் மேலோங்கும்.
தனக்கு பிடித்தது என்பது மட்டுமல்லாது, தனக்கு எது கை வரும் என்பதும் புரிய ஆரம்பிக்கும் நேரம். ஆனால், அப்பொழுது அவர்கள் மதிப்பெண் எனும் மாரத்தனில் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
பதின் பருவம்தான் விரும்பிய துறை சார்ந்த ஒன்றில் நுழைந்து வருங்காலத்தில் சாதிக்கும் முயற்சியை துவக்கும் பருவம். அதில் அவர்களுக்கு சரி தவறு தெரியாது என்பது உண்மைதான். அதனை கடக்க பெற்றோர் உதவி இல்லாமல் முயற்சிப்பது கடினம் என்பதும் அப்பட்டமான உண்மை.
ஆனால், எது முடியும் எது முடியாது என்பதை அவர்கள் எளிதில் கண்டு கொள்வார்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக தேவை பெற்றோர்களின் அனுபவத்துடன் கூடிய பிள்ளைகளின் சுய சிந்தனை.
Comments
Post a Comment