கனவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்
யாருக்கும் தன் கனவு தெரியாதென மமதையில் சுற்றி கொண்டிருக்கிறாள்
அனைவருக்கும் அவள் கனவை தெரியும்
அவர்கள் யாரும் காட்டிக்கொள்வதில்லை
கனவை தெரியுமென காட்டிக்கொள்ள கூடாதென்பது பெரியவர்களுக்கே உரித்தான ஒன்று போல
அறிவாளியான அவளும் கண்டு கொள்வாள் இவர்களின் நிலைப்பாட்டை
எனக்கு தெரியும்
இவளும் காட்டிக்கொள்ள மாட்டாள்!